Thursday, April 5, 2012

அடுத்த ஜனாதிபதி சாம் பிட்ரோடா?


Vikatan :4 April 2012
அகமதாபாத்:இந்தியாவின் அடுதத ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் குஜராத்தை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப  வல்லுநர் சாம் பிட்ரோடா முன்னணியில் இருப்பதால் அவருக்கு பிரகாசமான் வாய்ப்பு இருப்பதாக கூறப்ப்டுகிறது.

தற்போதைய ஜனாதிபதியான பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.இதனையொட்டி  நாட்டின் 16 வது புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதில் த்ங்களது ஆதரவு பெற்ற அல்லது தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை களமிறக்குவதில் காங்கிரஸ்,பா.ஜனதா உள்ளிட்ட   தேசிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இதில் காங்கிரஸ் சார்பில் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, மக்களவை சபாநாயகர் மீராகுமார், நிதியமைச்சர் பிரணாப்  முகர்ஜி, கரண் சிங் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் பிரபல தொழில்நுட்ப நிபுணரான சாம்பிட்ரோடா அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என  தெரிகிறது. குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர் , இயற்பியலில் முதுகலை பட்டம் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்தவர்
இயற்பியலில் முதுகலை பட்டம் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்தவர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பின்பேரில், இந்தியாவுக்கு திரும்பினார். ராஜீவ் காந்தியின் முழு ஆதரவுடன், தொலைதொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி, இந்தியாவை 21 ம் நூற்றாண்டுக்கு த்யார்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவ்ர்.

முதல்வர்கள் மம்தாபானர்ஜி, நவீன்பட்நாயக் ஆகியோருக்கு நிர்வாக ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இந்தியாவில் தகவல்  தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு ஆற்றியவர்.தேசிய அறிவுசார் கமிஷனின் தலைவராக இருந்தார். தற்போது  பிரதமரின் தகவல் மற்றும் உள்கட்ட‌மைப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகராக உள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் பொதுச்  செயலாளர் ராகுல் காந்தி வெளியிடுகையில், அவ்ருடன் சாம் பிட்ரோடா வளைய வந்தபோதுதான், அரசியல் கட்சிகளின்  கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment