Tuesday, April 24, 2012

launches virtual debit card called State Bank Virtual to curb online frauds



Mail today :Lalatendu Mishra     Mumbai   April 23, 2012 


For people who are scared of using their debit and credit cards or Internet banking for online shopping due to fear of fraud , the State Bank of India (SBI) has introduced a virtual debit card called State Bank Virtual that addresses all such concerns.


The electronic card can be created by the account holder or customer using SBI's Net banking facility for ecommerce transactions. State Bank Virtual has a limited shelf life and can be used for only one transaction to limit the exposure of the account. It allows the user to create a virtual card for any online transaction and the person is not required to share details of the principal account on the merchant Website thus insulating the account from any possible fraud.

"All forms of transactions, be it Internet banking, credit and debit cards, are fully secured but there are some people who are scared and hold back from online transactions on fears of compromise of data. The main objective behind this new product is to provide relief to these customers and give a push to e-commerce," Richhpal Singh, DGM, payment systems, SBI, told Mail Today.

"The new product is a convenient and secure gateway to online payment for all our Internet banking users," he added. Besides, not all account holders have credit cards and now the State Bank Virtual can be used to buy any product and service online. There is no fear of loss or theft of such a card. "Some of our Internet banking customers are not comfortable with e-commerce transactions. But now, they will have no problem. Apart from this, there are some Websites which are still considered unsafe and a virtual debit card comes in handy in dealing with such Websites," Singh added.

The State Bank Virtual has many customer-friendly features. There is no charge on creation of the card and the customer can create any number of cards at the same time. The card is created for each online transaction and is valid for maximum of 48 hours. There is no transfer of balance from the principal account inasmuch as only a lien is marked on the account. Actual transfer of balance takes place only when the customer does the actual transaction online, SBI said.

"It ensures that the customer does not lose interest even for a day. The card creation and online transaction are authorised only after successful validation of one-time password (OTP) thereby ensuring complete security for the transaction," the bank said.

Online transactions are on the rise in India. For 11 months till February 2012, debit card transactions worth Rs 48,000 crore were conducted at points of sale according to the Reserve Bank of India (RBI) data.

SBI to cut lending rates on SME loans by up to 2% soon




PTI :24 April 2012


New Delhi: Close on the heels of cutting auto loans and fixed deposit rates, State Bank of India (SBI) on Tuesday said it will reduce interest rates on SME (small and medium enterprises) loans by up to 2 percent soon.

"We have cut auto loans, car loans particularly. We are cutting rates for loans to SMEs very sharply, by 1.5-2 percent," SBI Chairman Pratip Chaudhuri told reporters here.

At present, SBI's lending rate for SME sector varies between 12.5 percent and 17 percent.

When asked if there would be any impact on its margin due to downward revision, he said, "Overall, the impact on margins will be neutral."

Yesterday, SBI had cut its car loan rate for new borrowers by 0.75 percent to 11.25 percent.

With the reduction, a customer has to pay Rs 1,725 EMI against Rs 1,765 per month earlier. SBI claimed this as the lowest EMI. A borrower thus would save Rs 480 per year on every one lakh.

Besides, the bank had slashed interest rates on fixed deposits by up to 1 percent across various maturities. However, there was upward revision of 0.25 percent in case of fixed deposits of 180 days.

Asked about loans to aviation sector, Chaudhuri said, "Air India has been restructured and there would not be any significant hit to the bank and the government is injecting a sizeable amount of capital. And in the Kingfisher we are hopeful they should be able to raise more equity."

Kingfisher is still an NPA (non-performing asset), he said, adding, "no further lending to the company. The company is trying hard to get equity now the ball is in the company's court." 

(நிஜ) டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்



Titanic route (நிஜ) டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்
நன்றி கிரி :ஏப்ரல் 10,2012
டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் பேசுகிறோமே தவிர நிஜ டைட்டானிக் கப்பல் பற்றி நம்மில் எத்தனை பேர் தெரிந்து கொண்டோம் என்று தெரியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் வரை எனக்கும் எதுவும் தெரியாது இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்தக் கப்பல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலில் எழுதுகிறேன். இதன் மூலம் நானும் பல விசயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
படிக்க ஓரளவு எளிமையாக கொடுக்க முயற்சிக்கிறேன். குற்றம் குறை இருப்பின் மன்னிப்பீர்களாக icon smile (நிஜ) டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்
லகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.
கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.
Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.
டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாக கருதுகிறார்கள்.
இந்தக் கப்பல் A முதல் G வரை பல அடுக்குகளாக கட்டப்பட்டது. மேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்கு கீழ் வகுப்புகளான இரண்டு, மூன்று வகுப்பு பயணிகளுக்குமானது. மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் ன் அறை)
Titanic Deck (நிஜ) டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள் இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது. இதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. இதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. புரியும் படி கூறவேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும். முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்கள் ஆகியோரை துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் சென்றனர் இதில் அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள். John Jacob Astor IV தான் இந்தக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர். இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம் டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டது. RMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மூன்றாம் வகுப்பில் தான் அதிக பயணிகள் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள். பல நாட்டை சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர். மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!! இவர் தன்னுடைய 97 ம் வயதில் 2009 ஆண்டு காலமானார். டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர்.
ஒவ்வொரு அடுக்கிற்க்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்பு பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும். விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர்.
கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நூறு வருடம் முன்பு 4500$ என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000$ க்கு வாங்க முடியுமாம்!
விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் 4 படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது 1100 – 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. முதல் வகுப்பு பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகை கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள். உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது.
படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள். கடுமையான பனி (−2°C) அப்போது நிலவியது. டைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்த உடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும்.
நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூட கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போல குளிர்ச்சியில் இருந்தால்!…
titanic1 (நிஜ) டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள் தப்பித்துச் செல்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது எனவே இந்தக்கப்பலில் சென்ற பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள். அப்படியும் தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர் அப்படி இருக்கும் போது அவர்களை காப்பாற்றாமல் கோழை போல இவர்கள் நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர்.
மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லது. நிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்தி. இரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும். இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7) பயன்படுத்தப்பட்டார்கள். அழுக்கு, வெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்கு பணி புரிவது என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது.
கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர்
முதல்வகுப்பில் 739 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும், மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும் இவர்களோடு 900 பணியாளர்களும் பயணம் செய்ய முடியும் ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம் ஆனால் இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900 ஊழியர்களும் சேர்த்து) பயணம் செய்தார்கள். முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர். அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள்.
டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. இதில் பல டன் பொருட்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்பட்டன. கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.
இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்ப வல்லது.
ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது. விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர். இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது. படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.
Captain Smith (நிஜ) டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள் கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார். கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன. செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றன. இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.
மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும். 10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே!
மனிதன் என்னதான் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதை உருவாக்கினாலும் இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை என்று நம் அனைவருக்கும் இயற்கை உணர்த்திக்கொண்டே வருகிறது. அதில் விலை உயர்ந்த பாடமாக மனித குலத்திற்கு இந்த விபத்து அமைந்து விட்டது.
ஏப்ரல் 15 2012 உடன் டைட்டானிக் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகப்போகிறது.
உண்மையில் டைட்டானிக் பற்றிய தகவல்களை திரட்டி மிரண்டு விட்டேன். எடுக்க எடுக்க பல பல புதிய சுவாரசியமான தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அத்தனையையும் எழுதினால் நான் ஒரு புத்தகம் தான் எழுத வேண்டும் அப்பவும் கூட அத்தனையும் எழுத முடியுமா! என்பது சந்தேகம் தான். எத்தனை எத்தனை விதமான தகவல்கள்!!! மலைத்து விட்டேன். உண்மையில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து விட்டேன் காரணம் முற்றும் போட முடியாத அளவிற்கு சங்கலித்தொடராக தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது அமுத சுரபி போல. இனியும் முடியாது! என்று இதோடு நிறுத்திக்கொண்டேன் ஆனால் நிச்சயம் இது சுவாரசியமான அனுபவமாக இருந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
சிறிய அளவில் கூற நினைத்து வழக்கம் போல நீண்டு விட்டது icon smile (நிஜ) டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்  இந்தப்பதிவு உங்களுக்கு “டைட்டானிக்” பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள உதவியிருக்கும் என்று நம்புகிறேன்

இந்தியா உட்பட பல நாடுகளில் 200க்கும் மேற்பட்ட ஜிம்களை துவக்க டோணி புது திட்டம்!


MS Dhoni
திங்கள்கிழமை, ஏப்ரல் 23, 2012,

டெல்லி: இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகளில் 200க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்கள்) துவக்க இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி திட்டமிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி உலக கோப்பையை பெற்று தந்து புகழின் உச்சிக்கு சென்றவர். கிரிக்கெட் ஆடுகளத்தில் அணியின் நிலவரத்திற்கு ஏற்ப பேட்டிங்கில் கலக்கும் திறன் கொண்ட டோணிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகம் எங்கும் ரசிகர்கள் உண்டு.

இதனால் பிரபல நிறுவனங்களான ஏர்செல், கோத்ரேஜ், ரிபோக் உட்பட 25 நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகிறார். இந்த நிலையில் டோணிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளில் சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க டோணி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஸ்போர்ட்ஸ் பிட் வோல்டு பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். இதற்காக வர்த்தக மேலாளர் அருண் பாண்டே என்பவருடன் கைகோர்த்து புதிய வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளார்.

இது குறித்து ரித்தி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிர்வாகி அருண் பாண்டே கூறியதாவது

வரும் மே மாதம் முதல்கட்டமாக 4 உடற்பயிற்சி கூடங்கள் துவக்கப்படும். அதன்பிறகு டோணிக்கு அதிக ரசிகர்கள் உள்ள இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு உடற்பயிற்சி கூடங்கள் விரிவுப்படுத்தப்படும்.
  
இத்திட்டத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை அளிக்க பல முன்னணி வங்கிகளும் முன் வந்துள்ளன. மேலும் பலத்தரப்பினரும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் (மே) இந்தியாவில் முதல்கட்டமாக குர்கான், டெல்லி, சண்டிகர், பரீதாபாத் ஆகிய 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் துவக்கப்பட்டு, ஸ்போர்ட்ஸ்பிட் வோல்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்படும். வெளிநாடுகளில் உடற்பயிற்சி கூடங்கள் துவங்குவது குறித்து துவக்க விழாவில் அறிவிக்கப்படும் என்றார்

ரஜினியே கேட்டும் கோச்சடையானை வேண்டாம் என்று சொன்ன ஏவிஎம்?



Rajini
ஒன்இந்தியா:திங்கள்கிழமை, ஏப்ரல் 23, 2012


மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார். நடிப்பதிலும் அந்தப் படத்தின் தொழில் நுட்பம் குறித்த விஷயங்களிலும் மிக ஆர்வமாகப் பங்கெடுத்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு, ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவில்லையாம்.

அது, இந்தப் படத்தை சௌந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பது!

காரணம் சுல்தானில் சௌந்தர்யா அண்ட் கோ செய்த குழப்படி & குளறுபடியால், தேவையின்றி நீதிமன்ற வழக்கு, பத்திரிகைகளில் தாறுமாறான செய்திகள் என ரஜினிக்கு மனவருத்தம் அடையும் நிலையை ஏற்படுத்தின. கோவா தயாரிப்பிலும் சௌந்தர்யா கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!

அதனால் 'கோச்சடையான்' படத்தினை எப்படியாவது கைமாற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம்.

இதில் ஒரு முயற்சியாக தனக்கு நெருக்கமான ஏவிஎம் சரவணனிடம் தனிப்பட்ட முறையில் கோச்சடையான் பற்றிப் பேசியுள்ளார் ரஜினி.

கேரளா ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் சரவணனைச் சந்தித்த ரஜினி, கோச்சடையான் படத்தயாரிப்பை அப்படியே கை மாற்றிவிட விரும்புவதாகக் கூறினாராம்.

ஆனால் சரவணன் சினிமா தயாரிக்கும் அல்லது வேறு படத்தை வாங்கி விநியோகம் பண்ணும் நிலையில் இல்லை. "சினிமா நிலவரம் சரியில்லை ரஜினி. அதனால் சினிமா தயாரிக்கும் மனநிலையில நாங்கள் இல்லை. நீங்களே வலியவந்து கேட்டும் என்னால் செய்ய முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... ஸாரி" என்றாராம் சரவணன்.

இதே பயத்தில்தான் அயன் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்று, பின் வருத்தப்பட்டார்கள் ஏவிஎம்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சினிமா என்ற குதிரை யாரை குப்புறத்தள்ளுமோ என்ற பயம்தான்!