Sunday, December 15, 2013

பிறை சூடும் பிரியன் ...என் மகன் ....ம் ...அவன் மான் போல் வந்தவன்



..ம் ...அவன் மான் போல் வந்தவன் 
என் கனவுகளின் ஒற்றைப்புதையல் 
இப்புவியின் இரண்டாம் சூரியன் 
இரவிலும் ஒளிர்வான் 

இப்பிறவி மட்டுமின்றி 
எப்பிறவியிலும் 
என் நிழலாய் உயிராய் 
என் வாழ்வின் நீட்சியாய் 
என் மகன் ..

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி 
இப்பிறவியில் உங்களுக்கு 
 அப்பா எனும் உன்னதத்தை உணர்த்திய 
பெருமைக்குரிய பெருமகனவன்தனே 

மகன்களை நேசியுங்கள் ..

   -- பிறை சூடும் பிரியன் 

No comments:

Post a Comment