Thursday, July 5, 2012

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி: புதிய தலைவர் கே.பி.நாகேந்திரமூர்த்தி


Thursday, July 05, 2012




தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டி.எம்.பி) புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.எம்.டி) திரு. கே.பி. நாகேந்திரமூர்த்தி பதவி ஏற்று கொண்டார். இவர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கடன் துறை பொது மேலாளராக இருந்து வந்தார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் அதிகாரியாக வங்கி பணியை தொடங்கினார். தொடர்ந்து வங்கித் துறையில் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
வணிகவியல் துறையில் பட்ட மேற்படிப்பு (தங்கப் பதக்கம்) முடித்து சி.ஏ.ஐ.ஐ.பி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வங்கி நவீனமயமாக்கல் வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக உள்ளார்.

திரு. கே.பி. நாகேந்திரமூர்த்தி, ஸ்பிக், டைட்டல் பார்க், டைசல் பயோ பார்க், இந்த் வங்கி ஹவுசிங் நிறுவனங்களில் நியமன இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். அவரது திறமைமிக்க அனுபவத்தின் மூலம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2013 ஆம்ம் ஆண்டுக்குள் ரூ.40,800 கோடி மொத்த வணிக இலக்கை அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வணிக வளர்ச்சித் துறை பொதுப் மேலாளர் திரு. எஸ்.செல்வன் ராஜதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tamilnad Mercantile Bank Limited
(A Scheduled Commercial Bank & Authorized Dealers in Foreign Exchange)
57, V.E. Road, Tuticorin, Tamilnadu, India. Zip: 628 002.
Phone: +91 461- 232 1382 / 232 1929 / 232 1932.
Email: 

No comments:

Post a Comment