Thursday, May 31, 2012

விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன்

 Viswanathan Anand Became World Champion


ஒன்இந்தியா :புதன்கிழமை, மே 30, 2012, 19:23
மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இஸ்ரேலை சேர்ந்த போரீஸ் ஜெல்பாண்டை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன், இஸ்ரேலின் போரீஸ் ஜெல்பாண்டு இடையே கடும் போட்டி நிலவியது.
 
மொத்தம் 12 சுற்றுகளை கொண்ட இறுதிப் போட்டியில் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகள் பெற்று வெற்றியாளரை முடிவு செய்ய முடியாமல், போட்டி டை பிரேக்கருக்கு சென்றது. முதல் சுற்று டை பிரேக்கரில் முடிய, 2வது போட்டியில் காய்களை விரைவாக நகர்த்திய ஆனந்த்தின் தாக்குதலில் ஜெல்பாண்டு திணறினார்.

அடுத்தடுத்து சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த், 1 வெற்றி, 3 டிரா மூலம் 2.5 புள்ளிகளை பெற்றார். ஆனால் ஜெல்பாண்டு சில தவறான காய் நகர்த்தல் மூலம் புள்ளிகளை பெற முடியவில்லை. இதன் மூலம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


No comments:

Post a Comment