Thursday, January 19, 2012

நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி




தகவல் தராமல் வங்கி கணக்கை முடிக்க கூடாது

ஆதாரம்:தினகரன் : 1/17/2012 1:23:30 AM

புதுடெல்லி : வாடிக் கையாளருக்கு முன்கூட்டி தகவல் அளிக்காமல் வங்கி கணக்கை முடிக்க முடியாது என்று டெல்லி நுகர்வோர் அமைப்பு தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி, கரோல்பாக் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பில் அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஸ்டேட் பாங்க் ஆப் பிகானரில் கணக்கு வைத்துள்ளேன்.

 சமீபத்தில் எனது 2 காசோலைகளை பரிமாற்றம் செய்த வங்கி, 3வது காசோலையை கார ணம் கூறாமல் நிராகரித்தது. கேட்டதற்கு கேஒய்சி எனப் படும் அடையாள ஆவண ங்கள் தரவில்லை என்று கூறி வங்கி கணக்கு முடிக் கப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 

எனக்கு தகவல் தெரிவிக்காமல் இப்படி செய்தது முறைய ல்ல. இதனால், மனஉளைச் சலுக்கு ஆளானேன்’ என்று கூறினார். இதை விசாரித்த நுகர் வோர் அமைப்பு, ‘வாடிக் கையாளருக்கு தகவல் தராமல் கணக்கை வங்கி தன்னிச்சையாக முடிக்க முடியாது. கேஒய்சி விதி முறைகளை வாடிக்கையா ளர் அளிக்க வேண்டியதை முன்கூட்டி தெரிவித்திருக்க வேண்டும். 

இது சேவை குறைபாடு. மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச் சலுக்கு ரூ.15,000 இழப்பீடு வழங்கவும், அவரது கணக்கை தொடரவும் வங்கிக்கு உத்தரவிடுகி றோம்’ என்று தீர்ப்பளித் தது.

No comments:

Post a Comment